Alaioli
பினாங்கு தைப்பூசத்தில் பொதுமக்களுக்கு இலவச மறுசுழற்சிப் பைகள் விநியோகம்!

பினாங்கு பிப் 2 பினாங்கு மாநிலத்தில் மாசற்ற தக்க வைக்கும் முயற்சியில், நெகிழிப் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளில், இங்கிருக்கும் பற்பல பொது அமைப்புகள் உள்பட, அரசு தரப்பினரும் தீவிரம் காட்டி வரும் நிலையில், இதற்கு தனது மாபெரும்  பங்களிப்பை வழங்குவதில், மாநில மாநகர் மன்றம்இங்கிருக்கும் பசுமை மன்றத்துடன்இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


அவ்வண்ணம் நிறைவடைந்த தைப்பூசத் திருநாளில் இக்கொள்கையில் தனது நிலைப்பட்டை தக்க வைக்கும் ஓர் உன்னத முயற்சியில் பொது மக்களுக்கு மறுசுழற்சிப் பைகளை இலவசமாக விநியோகிக்கும் பணியினை மேற்கொண்ட மாநகர் மன்றம், அவ்வாறே இத்திருநாளுக்காக இங்கிருக்கும்தண்ணீர்மலை சாலையில் நிறுவப்பட்ட தண்ணீர் பந்தல் வாயிலாக இதனை செவ்வனே செயல்படுத்தியது.


தைப்பூசத் திருவிழா தொடர்பில் 3 தினங்களுக்கு இங்கு தொடர்ச்சியாக நிறுவப்பட்டிருந்த  தண்ணீர்ப் பந்தலில் பக்தர்களின் தாகசாந்திக்கு பற்பல வழிகளில் உற்றப் பங்கினை ஆற்றிய மாநகர் மன்றம், நெகிழிக்கு எதிரான உபாயத்திற்கு தக்கப் பரிகாரமாக, மறுசுழற்சிப் பைகளை பொது மக்களுக்கு விநியோகித்து, சுற்றுச்சூழலைப் பேணும் விழிப்புணர்வுக்கும் தக்கதோர் அனுகூலமாக,இத்திட்டத்தை செயல்படுத்தியது.


அவ்வாறு தைப்பூசக் கொண்டாட்டத்திற்குத் திரளாக வருகையளித்திருந்த பொது மக்களுக்கு, மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழ துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ் ரீ சுந்தர்ராஜ் சோமுவுடன் இணைந்து, மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட இலவச மறுசுழற்சிப் பைகளை நேரிடையாக வழங்கியபோது,பலரும் அவற்றைநன்றிப் பெருக்குடன் பெற்றுச் சென்றனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News