Alaioli
தாய் வீடு திரும்பினார் பத்துமலை முருகன்.

எஸ்.எஸ்.மணிமாறன் 

பத்துமலை பிப்.3.   கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ். லீயில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் இருந்து கடந்த 30.1.2026 அன்று 8 மணியளவில் வள்ளி தேவசேனா சமேதராய் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதத்தில் அமர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்காட்சித் தந்து, வழி நெடுகிலும் பக்தர்களின் காணிக்கைகளை ஏற்று பத்துமலை திருத்தலம் நோக்கிப் புறப்பட்ட முருகன், தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்ற பல இலட்சம் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிலையில் இன்று 2.2.2026 திங்கட்கிழமை மதியம் ஆலயத்தை விட்டு மீண்டும் கோலாலம்பூரில் உள்ள தாய் வீடு நோக்கி ப் புறப்பட்டார்.


வெள்ளி இரதம் செல்லும் வழியில் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு தொண்டூழிய சேவகர்கள் ரேலா உறுப்பினர்கள் வழி நெடுகிலும் மிகுந்த கவனத்துடன் கண்காணிப்புடன் செல்லத் தலைப்பட்டதாக பத்துமலை முருகன் திருத்தலத்தின் அறங்காவலர் என்.சிவகுமார் அலை ஒளியிடம் தெரிவித்தார்.

Post Image

Leave a Comment
Trending News