Alaioli
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்


தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்

வீரமோகன்

தெலுக் இந்தான்:செபர் 12-
கீழ் பேராக் சமூக நலன் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எம். சிவபாலன் தலைமையில், அவரது குழுவினர்கள் இணைந்து தேசிய தினம் மற்றும் வருகின்ற 16 செப்டம்பர் 2026 மலேசியா தினத்தை முன்னிட்டு, தெலுக் இந்தான் வட்டாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மணிக்கூண்டு வளாகத்தில் ஜலோர் கெமிலாங் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

மலேசியா தினத்தை முன்னிட்டு, இவ்வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஜலோர் கெமிலாங் வழங்கி, தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தியதாக சங்கத் தலைவர் எம். சிவபாலன் தெரிவித்தார்.

பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையையும், நாட்டுப்பற்றையும் வளர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் குழுவினர்களும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஜலோர் கெமிலாங் வழங்கினர்.

Leave a Comment
Trending News