Alaioli
பிறை ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தில் விக்னேஸ்வரர் பூஜை மற்றும் கணபதி ஹோமம்

பினாங்கு பிறை ஜாலான் பாரு ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,இன்று காலை 17 பிப்ரவரி 2026 காலை பக்தி உணர்வுடன் விக்னேஸ்வரர் பூஜை மற்றும் கணபதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வு ஆலயத்தின் ஆன்மீக நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்ததுடன், கும்பாபிஷேக திருவிழா அனைத்து தடைகள் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் விநாயகப் பெருமானுக்கு முதலில் பூஜைகள் அர்ப்பணிக்கப்பட்டன. வேத மந்திரங்கள் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் ஆகம முறையில் கணபதி ஹோமத்தை நடத்தினர். யாகசாலையில் அக்னி ஏற்றப்பட்டு, சிறப்பு ஹோம திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களின் நல்வாழ்வு, அமைதி மற்றும் ஆலய வளர்ச்சி வேண்டி பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.


காலை முதலே பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, பூஜை நிகழ்வுகளில் பக்தி உணர்வுடன் ஈடுபட்டனர். ஹோமத்தின் இறுதியில் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


ஶ்ரீ முனிஸ்வரர்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் இவ்வாறான ஆன்மீக நிகழ்வுகள் ஆலயத்தின் பாரம்பரியம் மற்றும் சமய ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் வரவிருக்கும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்த நிகழ்ச்சியில் ஆலய தலைவர் மேஜர் சேகரன் முனியாண்டி,அரங்காவலர் டத்தோ ஶ்ரீ ந.கோபாலகிருஷ்ணன்,டத்தோ சந்திரகுமார்  மற்றும் பக்த பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர் .

Leave a Comment
Trending News