Alaioli
வழிபாட்டுத் தலங்கள் வளர்ச்சியில் அரசின் அதிகாரிகள் பங்களிப்பு தொடர வேண்டும்- சாம்சன் வேண்டுகோள்

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், மே 10.  பொருளாதாரச்  சூழலில் சிரமத்தை எதிர் நோக்கி வரும் வழிபாட்டுத் தலங்கள் வளர்ச்சியில் அரசு அதிகாரிகளின் பேராதரவும் ஒத்துழைப்பும் தொடர வேண்டும் என்று கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் எலிசா சாம்சன் இமானுவேல் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 

ஆலயங்கள் மேற்கொண்டு வரும் திருவிழா 


இங்கு, ஜூக்ரா சாலையில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயவருடாந்திர சித்திரைத் திருவிழாவில் , அழைப்பின் பேரில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த சாம்சன் மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார். 


தொடர்ந்து , அவர் நகராண்மைக் கழகத்தின் சார்பில் கணிசமான நிதியை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்ததாக அலை ஒளியிடம் கூறினார்.


முன்னதாக, ஆலய நிர்வாகத்தினர் சாம்சனுக்கும் அழைக்கப் பட்ட பிரமுகர்களுக்கும் மாலை பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.


முன்ளாள் மோரிப் சட்ட மன்ற உறுப்பினரும் தற்போது மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியுமான துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் யுஸ்ரினா ஹிட்ருஸ், மோரிப் சட்ட மன்ற பெர்டாயா மகளிர் அணி மேலாளர் புவான் நஸ்ரத்துல் ஹஸ்னா மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment