Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
தஞ்சோங் சிப்பாட் - வரும் ஆகஸ்ட் 2026 இல் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் ஏற்று நடத்தவிருக்கும் சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்றுள்ள கபடி போட்டி விளையாட்டுகளில் பங்கேற்க விருக்கும் இந்திய கபடி வீரர்கள் போட்டிகளில் சாதனைப் படைப்பர் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இங்கு, தஞ்சோங் சிப்பாட்டில் அமைந்துள்ள கொம்ளக்ஸ் முகிபா அரங்கில் கபடி 3 ஸ்டார் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற விளையாட்டுகளை நேரில் பார்வையிட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கி அவர்களைப் பாராட்டிய அவர் மேற்கண்ட கருத்தை அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர்கள் இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளி வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கபடி விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர், பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப் பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.-Alaiolinews


தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.