Alaioli
சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெறும் கபடியில் இந்திய கபடி வீரர்கள் சாதனைப் படைப்பர்= பாப்பா ராய்டு நம்பிக்கை

எஸ்.எஸ்.மணிமாறன்


தஞ்சோங் சிப்பாட் - வரும் ஆகஸ்ட் 2026 இல் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் ஏற்று நடத்தவிருக்கும் சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்றுள்ள கபடி போட்டி விளையாட்டுகளில் பங்கேற்க விருக்கும் இந்திய கபடி வீரர்கள் போட்டிகளில் சாதனைப் படைப்பர் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் நம்பிக்கைத் தெரிவித்தார்.


இங்கு, தஞ்சோங் சிப்பாட்டில் அமைந்துள்ள கொம்ளக்ஸ் முகிபா அரங்கில் கபடி 3 ஸ்டார் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற விளையாட்டுகளை நேரில் பார்வையிட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கி அவர்களைப் பாராட்டிய அவர் மேற்கண்ட கருத்தை அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர்கள் இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளி வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில், கபடி விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர், பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப் பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment