Alaioli
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால்   ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.

எஸ்.எஸ்.மணிமாறன் 

பந்திங் ஜூன் 8. சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான, அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு( ஏகேஎஸ்இஎஸ் ) எனும் பதிவுத் திட்டத்தின் வாயிலாக தொகுதியில் வசித்து வரும் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் முறையாக சேகரிக்கப்பட்டு  பரிசீலனைக்குப் பின்னர் தேவையான உதவிகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களது நலன் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வரும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.


ஞாயிற்றுக்கிழமை காலையில், இங்கு பந்திங் நகரை யொட்டி அமைந்துள்ள சுங்கை மங்கீஸ் சமூக மண்டபத்தில்   சிலாங்கூர் மாநில அரசின் உதவித் திட்டங்கள் தொடர்பில் நடைபெற்ற பொது மக்களுக்கான பதிவு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர் மேற்கொண்ட தகவலை வெளியிட்டார்.


புரோகிராம் ஏக்செஸ் பதிவுத் திட்டத்தின் கீழ் தொகுதியில் வசித்து வரும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் திட்டம் பின்னர் நன்மை பயக்கும் என்பதால்,  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அவசியம் பதிவு நடவடிக்கையில் கலந்து கொள்ளும்படி பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு வேண்டுகோள் விடுத்தார்.  குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள். அதற்கான ஆவணங்கள் நகல்கள் அலை பேசி தொடர்பு எண்கள் என பல விவரங்களை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து பெற்று அதிகாரிகள் பதிவு நடவடிக்கையில் இறங்கினர் என்று அவர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


சிலாங்கூர் மாநில அரசில் பணியாற்றி வரும் அதிகாரிகள், பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் இளையராஜா பழனிச்சாமி, பந்திங் இந்தியர் சமூகத் தலைவர் சாமிதுரை மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News