Alaioli
சமூகச் சிந்தனையாளர் பாலையா ஏற்பாட்டில் அன்னையர் தினம் மற்றும் சமூக மேடை நாடகம் அரங்கேற்றம்!!

சிவாலெனின்

ஈப்போ,மே12- அன்னையர் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும்,அன்னையர்களை அன்பு மிகுதியால் கொண்டாடும் விதமாகவும் சமூகச் சிந்தனையாளர் திரு.பெ.பாலையா ஏற்பாட்டில்  ஈப்போவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஈப்போ இந்தியச் சமூக நல கலை கலாச்சார பண்பாட்டு  இயக்கத்தோடு  பேரா கிந்தா வட்டார சமூக நல,விளையாட்டு துறை மற்றும் கலை கலாச்சார பண்பாட்டு இயக்கமும் இணைந்து வழங்கிடும் இந்த அன்னையர் தின கொண்டாட்டத்தில் \"உறவுகள்\" சமூக மேடை நாடகமும் அரங்கேறும் எனவும் பாலையா தெரிவித்தார்.


இச்சிறப்புமிகு நிகழ்ச்சி வருகின்ற 16.05.2026,சனிக்கிழமை மாலை மணி 4.00 தொடங்கி ஜாலான் தன்பூனில் அமைந்துள்ள  பேரா மாநில \"kompleks Kebudayaan Dan Kesenian Negara\" வில் நடைபெறும்.


மேலும், கடந்த 12 ஆண்டுகளாக இவ்வியக்கம் அன்னையர் தினம் மற்றும் கலை, கலாச்சார் பண்பாட்டு மேடை நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருவதாகவும் இவ்வாண்டு 13வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியில் 30 அன்னையர்களுக்கு "சிறந்த அன்னையர்" விருது வழங்கி கௌரவிக்கப்படவிருப்பதாகவும் விவரித்த பாலையா மாநில மகளிர்,குடும்ப மேம்பாடு,சமூக துறை மற்றும் தொழில்துறை மேம்பாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஷல்ஃபியா முகமாட் சிறப்பு வருகையும் புரியவிருக்கிறார் என்றார்.


அதுமட்டுமின்றி,

தொடர்ந்து அன்றைய மாலை மணி 6.30க்கு மேல்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவில் 

அதன் நிர்வாக இயக்குனர்,

டான் ஸ்ரீ கே ஆர் சோமா கலை கலாச்சார அறவாரியத்தின் செயலாளர், 

‘முத்தமிழ் சேவகன்’

டத்தோ பா. சகாதேவன் அவர்கள் தலைமையில்,


திரு. பூச்சி இரவி அவர்கள் இயகத்தில், மகரம் அமைப்பின் தலவைரும் தே.நி.நி.கூ சங்கத்தின் டான் ஸ்ரீ கே ஆர் சோமா கலை கலாச்சார அறவாரியத்தின் நிர்வாகச்செயலாளதுமான திரு. கரு. பன்னீர் செல்வம் அவர்களின் ஒருங்கிணைப்பில்..


"உறவுகள" எனும் சமுக மேடை நாடகம் நடைப்பெறும் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்ட பாலையா பொது மக்கள்,சமக ஆர்வலர்கள் மற்றும் பொது இயக்கத்தினர் திரளாக கலந்து ஆதரவு வழங்குமாறும் கேட்டு கொண்டார்.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment