Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன
பந்திங் மே 13 - பந்திங் மருத்துவமனையில் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வரும் 2027 இல் 500 மில்லியன் ரிங்கிட் கட்டுமானச் செலவில் கூடுதலாக புதிய வார்டுகள் நிர்மாணிக்கப்படும் என்று பந்திங் மருத்துவமனை இயக்குநர் புவான் மலிண்டாவதி முகமட் ஃபட்ஸில் தெரிவித்தார்.
1970 களில் கட்டப் பட்டுள்ளதாகச் சொல்லப்படும் பந்திங் மருத்துவமனையில் , நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இடப் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சின் வழி காட்டலில் புதிய கட்டிட நிர்மாணிப்பு திட்டமிட்டப்படி தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

நேற்று, தாதியர் தினத்தை வரவேற்கும் வகையில் அனைவருக்கும் வாழ்த்துகள் வழங்கியதோடு காலையில் உபசரிப்புடன் பந்திங் மருத்துவமனை வருகையாளர்களுடன் இணைந்து நடைபெற்ற கலந்தாய்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் மலிண்டாவதி மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
இவ்வட்டாரத்தில் பழைமையான மருத்துவமனையாக விளங்கி வரும் பந்திங் மருத்துவமனை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியை தாம் ஏற்பாடு செய்திருந்ததாக டாக்டர் மலிண்டாவதி அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

பந்திங் மருத்துவமனை வருகையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள லாவ் கோக் ஹூவா, மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் இன்னும் சிலரும் இந்தக் கூட்டத்தில் நோயாளிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளை முன் வைத்தனர்.-Alaiolinews


தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.