Alaioli
ஆர்.ரமணி
புக்கிட் மெர்தாஜம் - புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை முன்னால் அமைந்துள்ள ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் தலைவராக பணியாற்றி வந்த கார்த்திகேசன் அவர்கள் நேற்று திடீரென காலமானார்.
அவரின் மறைவையொட்டி இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். மேலும், மறைந்தவரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய டாக்டர் லிங்கேஸ்வரன், மறைந்த கார்த்திகேசன் அவர்கள் ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், இப்பகுதியின் ஆன்மிக முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்தவர் எனக் குறிப்பிட்டார்.
மேலும், “இந்த ஜடா முனீஸ்வரர் ஆலயம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது எனக் கூறி சில தரப்பினர் ஆலயத்தை அகற்ற முயன்றபோதிலும், அது சட்டப்பூர்வமான ஆலயம் என்பதை உறுதியாக வலியுறுத்தி, பல ஆண்டுகளாக ஆலயத்தைப் பாதுகாத்து, சிறப்பாகப் பராமரித்து வந்தவர் கார்த்திகேசன்,” என அவர் நினைவுகூர்ந்தார்.
அவரின் மறைவு ஆலயத்திற்கும், பக்தர்களுக்கும், சமூகத்திற்கும் பெரிய இழப்பாகும் என்றும் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.-Alaiolinews
தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.