Alaioli
சென்னையில் குடியரசு தினம்: பெலித்தா நாசி கண்டாரில் சிறப்பு கொண்டாட்டம்

ஆர்.ரமணி 

சென்னை ஜன 26 சென்னையில் உள்ள மரினா கடற்கரையில் இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னையில் செயல்பட்டு வரும் மலேசியாவின் புகழ்பெற்ற பெலித்தா நாசி கண்டார் உணவகம், தனது வாடிக்கையாளர்களுக்காக குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடி, உன்னதமான உபசரிப்புகளை வழங்கியது.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, அலை ஒளி ஊடக நிர்வாகத்தினர் ஆர். ரமணி, மகேஸ்வரன் ஆகியோர் இன்று மதிய உணவு நேரத்தில் சென்னை பெலித்தா நாசி கண்டார் உணவகத்துக்கு வருகை தந்தனர்.


உணவகத்தில் அன்பான வரவேற்பு வழங்கப்பட்டதுடன், மலேசியாவின் பாரம்பரிய உணவுகளான ரோட்டி சனாய், தே தாரேக் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் மலேசிய சுவையை 그대로 வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, சென்னை பெலித்தா நாசி கண்டார் உணவக மேலாளர்கள் சொயித், பாபு தெரிவித்தார். இந்த உணவுகள் மலேசியர்களையும் இந்தியர்களையும் ஒரேபோல் கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும், மலேசியா பூச்சோங் பகுதியில் இருந்து உள்ள நாசி கண்டார் பைசிகள் உணவகத்தை நடத்தி வரும்   சொகிஃப்  சென்னை அவர்கள்  சென்னை , பெலித்தா நாசி கண்டார் உணவகத்தில் கிடைத்த உபசரிப்பும் உணவின் சுவையும், தங்களை மலேசியாவில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்ததுடன் , சென்னைக்கு வருகை தரும் மலேசியர்கள் தவறாமல் இந்த உணவகத்தை பார்வையிடலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.


மலேசியாவில் உணவு துறையில் தனித்துவமான சாம்ராஜியத்தை உருவாக்கிய டான் ஶ்ரீ ரமேஷ் முருகன் அவர்களின் கிளை நிறுவனமாக, இந்தியாவின் சென்னை நகரில் பெலித்தா நாசி கண்டார் உணவகம் சிறப்புடன் செயல்பட்டு வருவதுடன் டான் ஶ்ரீ அவர்களின் மன நேயம் மற்றும் ஆளுமை மற்றவர்களுக்கு மிகுந்த குறிப்பிடதக்க தலைமைதுவ பண்புகளை அடையாளம் கொண்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.



Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News