Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் மே, 22- நூறாண்டுகள் பழைமையான பந்திங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் 68 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா இரத ஊர்வலம் மற்றும் பல் வேறு சிறப்பு வைபவங்களுடன் ஆலய நிர்வாகத்தினரின் ஒருமித்த பேராதரவுடன் 30.5.2026 சனிக்கிழமை காலை 8 மணியளவில் பந்திங் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால் குட ஊர்வலம் மாரியம்மன் ஆலயம் வரை நடைபெறும் என்று ஆலயத் தலைவர் கே.குமார் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதே வேளையில், பாலாபிஷேகத்தைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட உள்ளூர் வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அன்றைய தினம் இரவு 7 மணி தொடக்கம் அம்பிகை அலங்கார ரூபிணியாய் இரதத்தில் அமர்ந்து திருஉலா வந்து தாமான் செரி புத்ரா தோமான் மக்கள் குடியிருப்புப்பகுதி பக்தர்களுக்கு அருட் காட்சி தருவார் என்று குமார் அலை ஒளியிடம் கூறினார். மேலும், 21.5.2026 தொடங்கி 31.5.2026 வரை உபய அன்பர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் ஆலயத்தில் இடம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.-Alaiolinews
தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.