Alaioli
பந்திங் வட்டாரத்தில் டெங்கிக் காய்ச்சலால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங் மே 23-   பந்திங் வட்டாரத்தில் தற்போது டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


குறிப்பாக, இங்கு தாமான் லங்காட் முர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா மக்கள் குடியிருப்பு ப் பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை பந்திங் மருத்துவமனையில் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.


கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் செம்பாக்கா கூனிங் சிறப்புக் கூட்ட அறையில் நடைபெற்ற வாராந்திரக் கூட்டத் தொடரில் உமா நந்தினி மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.


மாவட்ட சுகாதார இலாகா அதிகாரிகள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் எடிஸ் கொசுக்கள் அழிப்பதற்கான மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை குத்தகைப் பணியாளர்கள் உதவியுடன் தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். 


டெங்கி காய்ச்சல் கண்ட நோயாளிகள் தாமதம் செய்யாமல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி உமா நந்தினி அலை ஒளி வாயிலாக ஆலோசனை விடுத்தார்.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment