Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் மே 23- பந்திங் வட்டாரத்தில் தற்போது டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

குறிப்பாக, இங்கு தாமான் லங்காட் முர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா மக்கள் குடியிருப்பு ப் பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை பந்திங் மருத்துவமனையில் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் செம்பாக்கா கூனிங் சிறப்புக் கூட்ட அறையில் நடைபெற்ற வாராந்திரக் கூட்டத் தொடரில் உமா நந்தினி மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
மாவட்ட சுகாதார இலாகா அதிகாரிகள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் எடிஸ் கொசுக்கள் அழிப்பதற்கான மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை குத்தகைப் பணியாளர்கள் உதவியுடன் தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

டெங்கி காய்ச்சல் கண்ட நோயாளிகள் தாமதம் செய்யாமல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி உமா நந்தினி அலை ஒளி வாயிலாக ஆலோசனை விடுத்தார்.-Alaiolinews

தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.