Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் மே 23- பந்திங் வட்டாரத்தில் தற்போது டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

குறிப்பாக, இங்கு தாமான் லங்காட் முர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா மக்கள் குடியிருப்பு ப் பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை பந்திங் மருத்துவமனையில் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் செம்பாக்கா கூனிங் சிறப்புக் கூட்ட அறையில் நடைபெற்ற வாராந்திரக் கூட்டத் தொடரில் உமா நந்தினி மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
மாவட்ட சுகாதார இலாகா அதிகாரிகள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் எடிஸ் கொசுக்கள் அழிப்பதற்கான மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை குத்தகைப் பணியாளர்கள் உதவியுடன் தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

டெங்கி காய்ச்சல் கண்ட நோயாளிகள் தாமதம் செய்யாமல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி உமா நந்தினி அலை ஒளி வாயிலாக ஆலோசனை விடுத்தார்.-Alaiolinews

போக்குவரத்து செய்திகள்
PLUS jangka 2.2 juta kenderaan sehari sempena cuti persekolahan dan perayaan berganda
தேசிய செய்திகள்
Lapan Kakitangan IPPTAR Terima Pengiktirafan Anugerah Perkhidmatan Cemerlang 2025
சாதனை தமிழர்கள்
இளம் மலையேறி G7 சாதனையுடன் புதிய சரித்திரம் படைத்தார்!
சாதனை தமிழர்கள்
Pendaki Muda Cipta Sejarah dengan pencapaian tawan G7
சாதனை தமிழர்கள்
Young Hiker Makes History With G7 Achivement
தேர்தல் செய்திகள்
இந்தியர் குரல் புறக்கணிக்கப்பட்டால் ஜொகூரில் சுயேட்சை அலை உருவாகும்
மருத்துவ செய்திகள்
பந்திங் வட்டாரத்தில் டெங்கிக் காய்ச்சலால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
சாதனை தமிழர்கள்
தீபகற்ப மலேசியாவின் ஜி7 சிகரங்களைத் தொட்ட இளம் மலையேறி இளைஞர்