Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், மே 25 - வாழ்வாதாரம் குறைந்து சிரமத்தை எதிர் நோக்கும் பி 40 பிரிவின் கீழ் ஏழ்மையில் இருந்து வரும் இந்திய குடும்ப உறுப்பினர்களின் நடப்பு நிலவரங்களைக் கேட்டறியும் சிலாங்கூர் மாநில அரசின் வறுமை ஒழிப்புத் திட்ட நடவடிக்கைக் குழு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சமூகத் தலைவர்கள் வாயிலாக பக்குல் மாக்கான் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றி தேவைப்படும் உதவி நிதியை முன்னெடுத்து அவர்கள் கண்ணீரைத் துடைக்கும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.
இங்கு, தெலுக் பங்லீமா காராங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கொண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார்.

மாநில அரசின் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக இவ்வட்டாரத்தில் செயல்படும் அரசு சேவையாளர்கள், சிரமத்தை எதிர் நோக்கி வரும் மனிதர்களின் விவரங்களைச் சேகரிப்பதுடன் தமது கவனத்திற்கும் தெரிவிப்பதோடு, தேவைப்படும் உதவிகளை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவர் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு கூறினார்.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிஜங்காங் இந்தியர் சமூகத் தலைவர் முருகன் குணசேகரன் விடுத்திருந்த அழைப்பின் பேரில் கலந்து கொண்ட பாப்பா ராய்டு, நிகழ்ச்சியில் பங்கேற்ற வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பங்குல் மாக்கான் உணவுப் பொருட்களை எடுத்து வழங்கினார்.
கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் எலிசா சாம்சன் இமானுவேல், பந்திங் இந்தியர் சமூகத் தலைவர் சாமிதுரை, பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், கோலலங்காட் ம இகா தொகுதி த் தலைவர் ஸ்ரீதரன் ரெங்கநாதன் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.-Alaiolinews

தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.