Alaioli
செமினி தோட்டத் தமிழ்ப் பள்ளி நான்காவது முறையாக செந்தமிழ் விழாவில் முதலிடத்தில் வாகை சூடியது.

 எஸ்.எஸ்.மணிமாறன்

காஜாங் மே 31.  இங்கு, காஜாங் அருகில் உள்ள வெஸ்ட் கண்றி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் உலு லங்காட் மாவட்ட ரீதியில் மற்ற தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்ற செந்தமிழ் விழாவில்  நான்காவது முறையாக செமினி தமிழ்ப்பள்ளி  முதலிடத்தில் வெற்றி பெற்று வாகை சூடியதாக செமினி தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் குப்புசாமி தெரிவித்தார். 


தமிழ் மொழியை முதன்மைப் படுத்திய நிலையில் மொழிக்கு ஒரு விழாவாக எடுத்து நடத்திய நிகழ்ச்சியில் மாணவர்கள் நிகழ்ச்சியில் பலரும் தங்களது திறனை வெளி கொணர்ந்து பரிசும் பாராட்டும் பெற்றதாக அவர் கூறினார்.  கவிதை ஒப்புவித்தல், திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு மன நிறைவை அளித்தததாக நெடுஞ் செழியன் தெரிவித்தார். உற்சாகத்தின் ஊடே செந்தமிழ் விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமது பாராட்டை அவர் தெரிவித்துக் கொண்டார்.



Post ImagePost Image

Leave a Comment
Trending News