Alaioli
பினாங்கு தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்றது.திரளானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஆர்.ரமணி 

பினாங்கு, பிப் 1பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் 240ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா இவ்வாண்டும் மிகுந்த கோலாகலத்துடன் மற்றும் ஆன்மிக ஒற்றுமையுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.


பினாங்கு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அன்னதான சேவைகள் வழக்கம்போல் பெரும் வரவேற்பைப் பெற்றன. பக்தர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் ஓய்வு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டைய தைப்பூச விழாவை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒருங்கிணைத்து நடத்தியது. சமய ஒற்றுமையையும் ஒழுங்கையும் முன்னிறுத்திய இந்த திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.


பினாங்கு மாநில காவல் துறை தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்ததாவது, தைப்பூசத் தினத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு விழிப்புணர்வை உயர்த்தும் வகையில் காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு கையேடுகளும் விநியோகிக்கப்பட்டன.


இந்நேரம், பல ஆன்மிக அமைப்புகள் தங்களது சேவைகளை பொதுமக்களிடம் வழங்கின. சஹஜ யோகா தின மையம்சுய சக்தி ஞான சபை உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மிக வழிகாட்டல் மற்றும் தியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.


பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அரவாரியத்தின் தேசிய உச்ச மன்ற உறுப்பினரும் மாநில துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ கா. புலவேந்திரன் கூறுகையில்,

“இந்த ஆண்டைய பினாங்கு தைப்பூச விழா மிகவும் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றது. எந்தவித விரும்பத்தகாத சம்பவங்களும் பதிவாகவில்லை. பொதுமக்களும் பக்தர்களும் காவல் துறையினருடன் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர், பினாங்கு மாநில காவல் துறையின் தண்ணீர் பந்தலுக்கு வருகை தந்த பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் கருணாநிதி,


பினாங்கு தைப்பூசத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், சமய ஒழுங்குகளுக்கு ஏற்ப தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுவது பாராட்டத்தக்கது என்றும் அலைஒளி ஊடகத்திடம் தெரிவித்தார்.காலை நேர கணக்கெடுப்பின்படி சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டிருந்ததாகவும், நண்பகல் நேரத்தில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பினாங்கு தைப்பூசம் ஆண்டுதோறும் ஆன்மிக பக்தி, சமூக ஒற்றுமை மற்றும் தன்னார்வ சேவைகளின் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.


இதனிடையே நேற்று தங்க வெள்ளி ரதங்கள் ஊர்வலமாக வருகை அளித்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முருகப் பெருமானும் வேலும் காட்சியளித்தது,இந்த ரத்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோ கலந்துகொண்டனர்,பினாங்கு மாநகர் மன்றம் தூய்மை பணிகளில் ஈடுபடத்துடன்,நூற்றுக்கணக்கான மயில்  காவடிகள் பினாங்கு நகரை இந்த ரத்த உறவாளத்தில் கலந்துகொண்டு பக்தி மயமானது குறிப்பிடத்தக்கது 


Post ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News