Alaioli
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..

க.வீரமோகன்.

ஊத்தான் மெலிந்தாங்.   ஜூன் 4.ஊத்தான் மெலிந்தாங் சன் மார்க்க பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி பாரதி தமிழ் பள்ளியின் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றது.திடல் திறன் போட்டியை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார் பாரதி தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் ராஜகோபால்.


பாலர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி கலையரசி பழனிவேல் முன்னிலையில் மொத்தம் 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பயிலும் மாணவர்கள் யாவரும் வருங்கால தமிழ் பள்ளி மாணவர்கள் ஆவர்.இப்பாலர்பள்ளிக்கு பெற்றோர்கள் அனைவரும் நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர் என தலைமை ஆசிரியர் திருமதி கலையரசி பழனிவேல் தெரிவித்தார்.



Post ImagePost Image

Leave a Comment
Trending News