Alaioli
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, வாசனை தான்ய திருக்குட நீராட்டுக்குப் பின்னா், காலை 6.15 மணிக்கு மூலவரான சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், மூலவா், வள்ளி, தெய்வானை விமானக் கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
தொடா்ந்து, எண் வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், மாலையில் தானிய வழிபாடு நடைபெறும்.
அதேபோல, ராஜகோபுரம் அருகேயுள்ள சுவாமி சண்முகா் யாகசாலையில் திங்கள்கிழமை அதிகாலை 12ஆம் கால யாகசாலை பூஜைகளில் மகா நிறை அவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.15 மணிக்கு சுவாமி சண்முகா், ஜெயந்திநாதா், நடராஜா், குமரவிடங்கபெருமான், பரிவார மூா்த்திகளுக்கு விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
அதையடுத்து, காலை 9 மணிக்கு சுவாமி சண்முகா் உருகுசட்ட சேவையாகி சண்முக விலாச மண்டபம் சோ்கிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், இரவு 7 மணிக்கு சுவாமி சண்முகா், சுவாமி ஜெயந்திநாதா், சுவாமி குமரவிடங்கப்பெருமான், பரிவாரமூா்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
குடமுழுக்கையொட்டி, அதிகாலைமுதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில், கடற்கரையில் குவிந்திருந்தனா். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது. குடமுழுக்கு முடிந்ததும் பக்தர்கள் மீது ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.
மேலும் குடமுழுக்கு நிகழ்வு காரணமாக கோயில் வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.











மலேசியா
மூன்று ஆண்டுகளில் நிலைத்தன்மையும் நேர்மையும் — ஒற்றுமை அரசு மலேசியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்தியது
மலேசியா
ஜொகூர் முழுவதும் ‘BANTUAN KASIH JOHOR’ வழங்கல் தீவிரம் — மாசாபில் மகிழ்ச்சியுடன் உதவிகளை வழங்கிய மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காஸி
ஜொகூர்
‘காற்று வெளியிடை கண்ணம்மா’ கவிதைத்தொகுப்பு ஜொகூரில் அறிமுக விழா
ஜொகூர்
இந்திய இளம் பட்டதாரிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் — மாநாட்டில் ஒலித்த முக்கியக் கருத்துகள்
இந்தியா
India Falls to Germany 5-1 in Men’s FIH Hockey Junior World Cup 2025 Semi-Finals at Madurai
கால்பந்து
Malaysia Fights to the End but Indonesia Denies Women's Team Final Berth in Gripping Semi-Final
ஈப்போ
உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? சிவநேசன் சிவநேசன் காட்டம்
ஜொகூர்
ஜொகூர் மாநிலத்தில் டெங்கு நோய் குறைவடைந்த நிலையிலும், இந்த வாரத்தில் புதிய வழக்குகள் அதிகரிப்பு - லிங் தியான் சூன் எச்சரிக்கை.